கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

Published on

கொலை வழக்கில் நீதிமன்றத்துக்கு வராமல் கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த குன்னம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு (46). இவரது மனைவி ராமுத்தாய். கட்டடத் தொழிலாளியான ராஜூ, கடந்த 2012- ஆம் ஆண்டு தனது மனைவி ராமுத்தாயை சிறுமலை பிரிவில் கொலை செய்ததாக புகாா் எழுந்தது.

இதன்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸாா் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து அவா் பிணையில் வெளியே வந்தாா். இதன் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் கடந்த 13 ஆண்டுகளாக அவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதன்பேரில், கேரளத்தில் பதுங்கி இருந்த ராஜூவை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பிறகு நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com