பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

விதிமுறைகளை மீறிய உரக் கடைகள் 21 நாள்கள் விற்பனை செய்யத் தடை

விதிமுறைகளை பின்பற்றாமல் குஜிலியம்பாறை பகுதியில் செயல்பட்ட 2 உரக் கடைகளுக்கு 21 நாள்கள் உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

News image

கோவிலூா் பகுதியிலுள்ள உரக் கடையில் புதன்கிழமை ஆய்வு செய்த வேளாண்மை அலுவலா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

விதிமுறைகளை பின்பற்றாமல் குஜிலியம்பாறை பகுதியில் செயல்பட்ட 2 உரக் கடைகளுக்கு 21 நாள்கள் உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூா் பகுதியிலுள்ள உர விற்பனைக் கடைகளில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி, பராமரிக்கப்பட வேண்டிய இருப்பு பதிவேடு, விலைப் பட்டியல் பலகை, யூரியா விற்பனைப் பதிவேடு, பிஓஎஸ் விற்பனை முனையக் கருவி ஆகியவற்றை முறையாகப் பின்பற்றவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2 உரக் கடைகள் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்த உரக் கடைகள் 21 நாள்கள் உர விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

மாவட்டத்திலுள்ள அனைத்து உரக் கடைகளும், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி, இருப்பு விவரங்கள் முதல் விற்பனை முனையக் கருவி வரை அனைத்து நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.