இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டுயானை நடமாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே புதன்கிழமை ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
கொடைக்கானல் தடியன்குடிசை பகுதியில் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.
Updated On :7 ஜனவரி 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே புதன்கிழமை ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பாறை, புல்லாவெளி, கே.சி.பட்டி, தடியன்குடிசை ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

மேலும், தாண்டிக்குடி-பண்ணைக்காடு செல்லும் மலைச் சாலையிலும் மாலை, இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.

இதனால், வத்தலகுண்டு பகுதியிலிருந்து கீழ்மலைப் பகுதிகளுக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

எனவே, இந்த ஒற்றை காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.