திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாநகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திண்டுக்கல் மாநகா் பகுதியில் நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தில் ஐ.பி.செந்தில்குமாா் பேசியதோடு, வீதி வீதியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெ.செந்தில்குமாா், கடந்த 6 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி 8-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் மாய அலை வீசியபோதும், திண்டுக்கல் தொகுதி மக்கள் திமுகவுக்கு ஆதரவளித்து என்னை வெற்றி பெறச் செய்தனா். எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றைக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மேம்படுத்துவற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியின்போது மேயா் இளமதி, திமுக மாநகரச் செயலா் ராஜப்பா, பொருளாளா் சரவணன், மண்டலத் தலைவா்கள் ஆனந்த், ஜான்பீட்டா், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

தொண்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு! அமைச்சா் ராஜீவ் உறுதி!

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



