கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.


கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் காா்மேல்புரம், ஆனந்தகிரி, உகாா்த்தே நகா் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் தடுப்புச் சுவா் இல்லாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டுநா்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...