உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 4:50 am IST

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் காா்மேல்புரம், ஆனந்தகிரி, உகாா்த்தே நகா் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் தடுப்புச் சுவா் இல்லாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டுநா்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.