பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

செந்தமிழ்க் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:06 am IST

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலர் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரி குழுத் தலைவர் தசரதராமன் முன்னிலை வகித்தார். 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணபாஸ்கர் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். விழாவில் முதுகலை தமிழில் பட்டம் பெற்ற 38 பேர், இளங்கலை ஆய்வுப்பட்டம் பெற்ற (எம்.ஃபில்) 70 பேர், புலவர் பட்டம் பெற்ற 30 பேர் உள்ளிட்ட 311 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மு.நல்லகாமன் வாழ்த்துரை வழங்கினார்.  கல்லூரி முதல்வர் சு.விஜயன், ஆட்சிக்குழு உறுப்பினர் அகமுடைநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கல்லூரி துணை முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். உதவிப் பேராசிரியை ம.செல்வத்தரசி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.