மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி தண்ணீர் லாரியும் முறையாக வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி தண்ணீர் லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் லாரியை மீட்கச் சென்றனர்.
அவர்களையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், தண்ணீர் லாரியையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


