மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து மின் மோட்டாரில் மறைத்து, நூதன முறையில் கடத்திவரப்பட்ட 406.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில், வந்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராம்குமார் கொண்டுவந்த மின் மோட்டாரின் காயில் பகுதியில் தங்கத்தை உருக்கி சுற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வந்த தங்கத்தின் எடை 406.5 கிராம். இதன் மதிப்பு ரூ. 12 லட்சத்து 71 ஆயிரத்து 125 ஆகும்.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, ராம்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


