திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் செயல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள 1.10 ஏக்கர் இடத்தில் கடலை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை சிலர் ஞாயிற்றுக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம். இதையடுத்து செயல் அலுவலர் சக்கரையம்மாள் திருமங்கலம் நகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் அமைப்பு ஒன்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இந்த இடம் கோயில் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் சுற்றுச்சுவரை தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


