மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைரோடு அருகே கல்லூரி மாணவர் கொலை

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:11 am

DIN

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் மோகன்ராஜ்(21). மதுரை மாவட்டம், கருமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் கேசவமூர்த்தி,(21), எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி(21), ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நாகசூர்யா(21) ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளார்.
நிகழ்ந்து முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு
அடுத்துள்ள பொட்டிசெட்டிபட்டி பகுதியில், இயற்கை உபாதை
கழிக்க மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு காரில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர்களை ஆயுதங்களுடன் தாக்க முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக 4 பேரும் ஓடியுள்ளனர். அப்போது மர்ம கும்பல் மோகன்ராஜை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.