மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கோரிய மனு தள்ளுபடி 

உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 4:12 am

தினமணி

உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
 கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு மாநில அளவிலான தகுதித் தேர்வில் (எஸ்இடி) தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களைச் சமர்பிக்க பிப்ரவரி 9 ஆம் தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேர்வு விண்ணப்பங்கள் அடங்கிய இணையதளத்தின் சர்வர் வேகம் மிக்குறைவாக இருந்தது. இதனால் தேர்வு எழுத விரும்பிய பலரால் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே மாநில தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நீதிமன்றத்தை தாமதமாக நாடியுள்ளார் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.