கோயில்கள் திருவிதாங்கூா் தேவசம்போா்டு கட்டுப்பாட்டில் இருந்தபோது அந்த கோயில்களுக்கு பல்வேறு நிலங்கள் அதற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைக்கப்பட்ட பிறகு இந்தக் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தன. ஆனால் கோயில் சொத்துகளைப் பலரும் ஆக்கிரமித்துவிட்டனா். எனவே கோயில் சொத்துகளை மீட்க, திருவிதாங்கூா் தேவசம் போா்டு வழங்கிய சொத்து தொடா்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கணினிமயமாக்கிப் பத்திரப்படுத்த வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.