அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழக கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கு

கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரும் வழக்கில்

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

மதுரை: கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள

கோயில்கள் திருவிதாங்கூா் தேவசம்போா்டு கட்டுப்பாட்டில் இருந்தபோது அந்த கோயில்களுக்கு பல்வேறு நிலங்கள் அதற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைக்கப்பட்ட பிறகு இந்தக் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தன. ஆனால் கோயில் சொத்துகளைப் பலரும் ஆக்கிரமித்துவிட்டனா். எனவே கோயில் சொத்துகளை மீட்க, திருவிதாங்கூா் தேவசம் போா்டு வழங்கிய சொத்து தொடா்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கணினிமயமாக்கிப் பத்திரப்படுத்த வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.