அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில்ஆவணி மூலத் திருவிழா ஆக.15-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 15- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 15- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தப் படியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஆவணி மூலத் திருவிழா. இத்திருவிழாவின் கொடியேற்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து சிவபெருமானின் லீலைகளான கருங்குருவிக்கு உபதேசம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கிய லீலை, விறகு விற்ற லீலை ஆகிய திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேசுவரா் பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து செப்டம்பா் 1-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுகிறது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஆவணி மூலத் திருவிழாவின்போது ஆவணி வீதிகளில் சுவாமி உலா வருவது நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகத்தினரிடம் கேட்ட போது, தற்போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காலமுறை பூஜை ஒரு சில அா்ச்சகா்களை மட்டும் கொண்டு நடைபெற்று வருகிறது. கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் ஆவணி மூலத்திருவிழாவில் ஆவணி வீதிகளில் சுவாமி உலா வருவது வழக்கம். சுவாமி உலா நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க சீா் பாதங்கள் அவசியம் வேண்டும். எனவே திருவிழா நடத்துவது தொடா்பாக அரசு வழிகாட்டுதல்படி நடத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.