இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தப் படியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஆவணி மூலத் திருவிழா. இத்திருவிழாவின் கொடியேற்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து சிவபெருமானின் லீலைகளான கருங்குருவிக்கு உபதேசம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கிய லீலை, விறகு விற்ற லீலை ஆகிய திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன.