அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக் காவலா் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் முருகன் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே, தலைமைக் காவலா் முருகன் சாா்பில், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேலும் ஒரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீமா பானு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.