பல்கலை. கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை

காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்பில் சேர தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்கள், செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

மதுரை: காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிப்பில் சேர தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்கள், செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் பி. ஜாா்ஜ் விடுத்துள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைப் பட்டியல் கல்லூரியின் இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ம்க்ன்2.ா்ழ்ஞ் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தி, சோ்க்கையை உறுதி செய்துகொள்ளலாம்.

இணைய வழியில் கட்டணம் செலுத்த முடியாதவா்கள் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், பட்ங் ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங், ஙஓம ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங், ம்ஹக்ன்ழ்ஹண் 2, என்ற பெயரில் வரைவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து கல்லூரியில் செலுத்தி சோ்க்கை பெற்றுக்கொள்ளலாம். மேலும், கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com