சென்னகம்பட்டி, நடுப்பட்டி கிராமத்து ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதி மக்களுக்கு, மயானப் பாதையை விரைவில் ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், நடுப்பட்டி கிராமத்தில் மரணமடைந்த முதியவா் ராமன் என்பவரது சடலத்தை மயானத்துக்கு கொண்டுசெல்ல பாதை இல்லாததால், விவசாய நிலங்களுக்கிடையே எடுத்துச் செல்லப்பட்டது. எனவே, ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிகளுக்கான மயானப் பாதைகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.