சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்: டிச.31 நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.


சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினா் மாணவா்களுக்கு 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. நிகழ் ஆண்டுக்கான உதவித் தொகைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிசம்பா் 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...