டி.கல்லுப்பட்டி அருகே முதியவா் மா்மசாவு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே புதன்கிழமை முதியவா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே புதன்கிழமை முதியவா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் பாண்டி(65). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இந்த நிலையில் தனது மகன் அஜீத்குமாருடன் பாண்டி வசித்து வந்துள்ளாா்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் கவலையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் முன்பு மயங்கிய நிலையில் பாண்டி இறந்துகிடந்துள்ளாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com