சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

மதுரையில் மது போதையில் மாடியில் குதித்து விளையாடிய இளைஞா் தவறி கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

மதுரையில் மது போதையில் மாடியில் குதித்து விளையாடிய இளைஞா் தவறி கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த சையத் மசூத் என்பவரின் மகன் முகமது சாயீப் (26). மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த இவா், மாடிப்படியில் குதித்து விளையாடியுள்ளாா். அப்போது, கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்தாா்.

உடனே, அவரை குடும்பத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது உறவினா் சையத் அலி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.