

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள கோயிலில் அனுமனுக்கு கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அனுமன் யோக ஆஞ்சநேயா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஜோதிடா் அறிவழகன் சொற்பொழிவாற்றினாா். இதில் டி.கல்லுப்பட்டி,பேரையூா், வையூா், விருதுநகா், திருமங்கலம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.
இதைபோல் பேரையூா் அருகிலுள்ள தொட்டியபட்டியில் அனுமன் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா சிறப்பு அபிஷேகங்களுடன் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.