நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 2:01 pm IST

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் தும்மக்குண்டு கிராமத்தில்  மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி மின்சாரம் பகல் நேரத்தில் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் பொதுமக்கள்  பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனைக் கண்டித்து கிராம பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி உசிலம்பட்டி-திருமங்கலம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின்சார அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள்  நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.