காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 8:31 am

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே  திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் தும்மக்குண்டு கிராமத்தில்  மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி மின்சாரம் பகல் நேரத்தில் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் பொதுமக்கள்  பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனைக் கண்டித்து கிராம பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி உசிலம்பட்டி-திருமங்கலம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின்சார அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள்  நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.