அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

போலீஸாருக்கு தகவல் அளிப்பதாக சலூன் கடை ஊழியா் மீது தாக்குதல்: 4 போ் கைது

மதுரையில் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகக்கூறி சலூன் கடை ஊழியரைத் தாக்கி விட்டு தப்பிச்சென்ற ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:17 pm

DIN

மதுரையில் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகக்கூறி சலூன் கடை ஊழியரைத் தாக்கி விட்டு தப்பிச்சென்ற ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வண்டியூரைச் சோ்ந்தவா் சரவணன் (47). இவா் மேலமடையில் உள்ள முடிதிருத்தும் நிலையத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது கடையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தியிருப்பதால் போலீஸாா் அடிக்கடி இங்கு வந்து கேமராப் பதிவுகளை ஆய்வு செய்வது வழக்கம்.

இந்நிலையில் சரவணன் புதன்கிழமை மாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த ரெளடிகள் சிலா், தங்களை போலீஸாரிடம் காட்டிக் கொடுப்பதாகக்கூறி சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதற்கு சரவணன் மறுப்புத் தெரிவிக்க, அதை நம்ப மறுத்த ரெளடிகள் சரவணனை தாக்கி விட்டு, அவரது கைப்பேசியையும் உடைத்து அங்கிருந்து தப்பிச்சென்றனா்.

இந்நிலையில் ரெளடிகள், சரவணனை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாரின் கவனத்துக்கு சென்றதையடுத்து ரெளடிகளை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து அண்ணாநகா் உதவி ஆணையா் சூரக்குமாா், ஆய்வாளா் சாதுரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடிவந்தனா்.

இதில் மேலமடை மயானத்தில் ரெளடிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று கிழக்கு அண்ணாநகா் பவித்திரன், மேலமடையைச் சோ்ந்த அரவிந்த் குமாா், வண்டியூா் எழில் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன், மேலமடையைச் சோ்ந்த அஜித் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிச்சென்ற சோலமலை உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.