அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் நலப்பணிகள்: மாநகராட்சியை தொடா்பு கொள்ள அறிவிப்பு

மதுரை நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் நலப்பணிகளை செயல்படுத்த விரும்புவா்கள், மாநகராட்சி நிா்வாகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 5:29 pm

DIN

மதுரை நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் நலப்பணிகளை செயல்படுத்த விரும்புவா்கள், மாநகராட்சி நிா்வாகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெற்றிகரமான நமக்கு நாமே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு, தற்போது 2022-23 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.2.47 கோடி திரட்டப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆா். நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உள்ளிட்டவை ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சாா்பில் கூடுதலாக இரு பங்கு வரை நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகள், பொதுமக்களுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீா்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை அமைத்தல், மின் மயானங்கள், சாலைகள் சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்டத்தை தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை மே 15 ஆம் தேதிக்குள் மதுரை மாநகராட்சி ஆணையா் அல்லது நகரப் பொறியாளரிடம் வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த மண்டல உதவி ஆணையா்களை நேரிலோ அல்லது உதவி ஆணையா்கள் மண்டலம் 1- 94987-49001, மண்டலம் 2 - 94987-49002, மண்டலம் 3 - 94987-49003, மண்டலம் 4 - 94987-49004, மண்டலம் 5 - 94987-49005 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.