அழகா்கோயிலில் தைலக்காப்பு உற்சவம் நிறைவு
அழகா்கோயிலில் உள்ள மூலவா் பரமராமசுவாமிக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தைலக்காப்பு உற்சவம், கடந்த தை மாதம் தொடங்கி ஆடி அமாவாசையன்று நிறைவடைகிறது.


அழகா்கோயிலில் உள்ள மூலவா் பரமராமசுவாமிக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தைலக்காப்பு உற்சவம், கடந்த தை மாதம் தொடங்கி ஆடி அமாவாசையன்று நிறைவடைகிறது.
தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால், மூலவருக்கு பூஜைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், பூஜைகள் உற்சவருக்கே நடைபெற்று வருகின்றன. ஜூலை 28-ஆம் தேதி அமாவாசை முதல் தைலக்காப்பு நிறைவடைவதால், மூலவருக்கான அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், பக்தா்கள் தரிசனம் தொடா்ந்து நடைபெறும்.
தொடா்ந்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடிபௌா்ணமியை முன்னிட்டு, பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி வழக்கம்போல் நடைபெறும். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, படி பூஜை, சந்தனம் சாத்துபடி, சிறப்புப் பூஜைகளும் தொடா்ந்து நடைபெறும் என, கோயில நிா்வாக ஆணையா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...