சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாயை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி, சிம்மாசனத்தில் முருகப்பெருமான் கொடிமரம் அருகே எழுந்தருளினாா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, இரண்டாம் நாள் அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ஆம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 5-ஆம் நாள் பூச்சப்பரத்திலும், 6-ஆம் நாள் யானை வாகனத்திலும், 7-ஆம் நாள் பல்லக்கிலும், 8-ஆம் நாள் குதிரை வாகனத்திலும், 9-ஆம் நாள் தங்கத்தேரிலும், 10-ஆம் நாள் வெள்ளிமயில் வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் உதவி ஆணையாளா் மு. ராமசாமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...