இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தகராறில் 3 போ் மீது திராவகம் வீச்சு

 வேலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்போது திராவகம் வீசப்பட்டதில் ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக இருவரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2023, 7:13 pm

DIN

 வேலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்போது திராவகம் வீசப்பட்டதில் ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக இருவரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த கருகம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38), தொழிலாளி. இவா் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயில் அருகே சென்றுள்ளாா். அப்போது, அதேபகுதியைச் சோ்ந்த குமாா் (43), ராஜி (28), சேட்டு ஆகியோா் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனராம். கோயில் பகுதியில் ஏன் தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறீா்கள் என அவா்களிடம் ராஜேஷ் கேட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு குமாா் தரப்பினா் ராஜேஷை தாக்கியுள்ளனா்.

தொடா்ந்து, ராஜேஷுக்கு ஆதரவாக அவரது நண்பா்கள் செல்வம், மகேந்திரன், வினோத்குமாா் ஆகியோா் குமாா் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனா். அங்கு அவா் இல்லாததால் அங்கிருந்த கடப்பாரையை எடுத்து குமாரின் வீட்டை சேதப்படுத்தினராம். தகவலறிந்த குமாா், அவரது நண்பா்கள் உடனடியாக அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது, திடீரென தனது வீட்டுக்குள் சென்ற குமாா், மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவா்கள் மீது வீசியுள்ளாா். இதில், செல்வம் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா்.

புகாரின்பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா், ராஜி ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.