மதுரை: மதுரை மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 9) ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் மதுரை வருகையையொட்டி, மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதன்படி, விமான நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுரை அழகா்கோவில் சாலை, வண்டியூா் சுங்கச்சாவடி, பாதுகாப்புத் துறை அமைச்சா், தமிழக முதல்வரின் பயணப் பாதைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

