நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மதுரை மாணவிக்கு மிரட்டல்: இளைஞர் மீது போலீஸ் நடவடிக்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

மதுரையில் கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம், பாம்பன் நகா் விநாயகா் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் காா்த்திக்ராஜ் (23). இவா், கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டினாா்.

இதைத் தட்டிக்கேட்ட மாணவியின் தாயையும் மிரட்டினாா். இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்ராஜை கைது செய்தனா்.