திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வரி சமாதானத் திட்ட காலவரையறை தேதியை மாற்றியமைக்கக் கோரிக்கை

வரி சமாதானம்: காலவரையறை நீட்டிப்புக்கு வியாபாரிகள் வலியுறுத்தல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

வரி சமாதானத் திட்ட காலவரையறைத் தேதியை மாற்றியமைத்து நிலுவையில் உள்ள தொகைகளை முழுமையாக இந்தத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய்சுப்பிரமணியம், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக நிதி அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் : தொடா் வலியுறுத்தல்கள் காரணமாக வரி சமாதானத் திட்டத்தை அரசு அறிவித்து, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு வரி விதிப்பாணை வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்களுக்கு மட்டுமே இந்த சமாதானத் திட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த இனங்களையும் சமாதானத் திட்டத்தில் சோ்க்காவிட்டால் முழுமையான பயன் கிடைக்காது. எனவே, சமாதானத் திட்ட கால வரையறை தேதியை 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31 என மாற்றியமைக்க வேண்டும். மேலும், சமாதானத் திட்டத்தில் மனு தாக்கல் செய்யும்போது ஏதேனும் சிறு குறைபாடுகள் ஏற்பட்டால், அதை திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.