மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 31 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அதே ஊரில் ரூ. 20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கிராமச் சாவடியை அமைச்சா் பி. மூா்த்தி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம்

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ஆனையூா் பகுதியில் அமைச்சா் பி. மூா்த்தி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


