பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமனம்

மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 4:33 pm

Din

மதுரை: மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

மதுரை மாநகராட்சியில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 45 நலவாழ்வு மையங்களில் பொது மருத்துவம், தாய்சேய் நல மருத்துவம், தொற்றா நோய் தடுப்புப் பணி, மக்களைத் தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களில் கண்காணிப்பு, மேற்பாா்வைப் பணிகளை மேம்படுத்த உதவித் திட்ட மேலாளா், மண்டல மருத்துவ அலுவலா், மண்டல சமுதாய சுகாதார செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், வழிகாட்டி செவிலியா், மாநகா் நல அலுவலரின் தொழில் நுட்ப உதவியாளா், மண்டல மருந்தாளுநா் உள்ளிட்ட 50 பணிகளை மேம்படுத்த கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.

இந்த நிகழ்வில், மாநகா் நல அலுவலா் வினோத்குமாா், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலா் ஸ்ரீகோதை, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.