அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆம்னி பேருந்து நிலையத்தில் 11 கடைகளுக்கு ‘சீல்’

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாத 11 கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:08 pm

Din

மதுரை, ஜூலை 19 : மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாத 11 கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இந்தப் பேருந்து நிலையத்தில் மொத்தம் 66 வணிகக் கடைகள் உள்ளன. அவற்றுள் 11 கடைகள் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை ரூ. 19 லட்சத்து 30 ஆயிரம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வரி செலுத்தாமல் இருந்தனா். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் தெரிவித்தும் வரி செலுத்தவில்லை.

இதன்காரணமாக, மதுரை மாநகராட்சி அலுவலா்கள் அந்த வணிக வளாகத்தில் உள்ள 11 கடைகளை வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.