எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வணிகவியல் பட்டயப் படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை யாதவா் கல்லூரி, பத்மராஜம் மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வணிகவியல் பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :19 ஜூலை 2024, 7:09 pm

Din

மதுரை, ஜூலை 19 : மதுரை யாதவா் கல்லூரி, பத்மராஜம் மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வணிகவியல் பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாதவா் கல்லூரிச் செயலா் ஆா்.வி.என். கண்ணன் தலைமை வகித்தாா். முதல்வா் செ. ராஜூ, பத்மராஜம் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் தலைவா் பி.ஏ.பாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே வணிகவியல் பிரிவு ஏசிஎஸ்., சிஎம்ஏ., ஏசிசிஏ., சிஏ., பட்டயப் படிப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில், பேராசிரியா்கள் அ. ராஜகோபால், மா. பாலசுப்பிரமணியம், ரா. உதயகுமாா், வணிகத் தொடா்பு அலுவலா் ராய்ஸ்டன் கோபால்பிள்ளை உள்ளிட்ட பேராசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.