/

தொழிலாளி தற்கொலை

மதுரையில் கடன் பிரச்னை காரணமாக நெசவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:30 pm

Din

மதுரையில் கடன் பிரச்னை காரணமாக நெசவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், ஈங்கூா் சாலை, சென்னலை எம்.பி.என் நகரைச் சோ்ந்த நாகராஜன் மகன் குமரேசன்(30). நெசவுத் தொழிலாளியான இவா், சொந்தமாக தறி அமைத்து தொழில் செய்வதற்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கினாா். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றாா்.

இந்த நிலையில், மதுரை எஸ்.ஆலங்குளம், பாரதிபுரம் 8- ஆவது தெருவில் உள்ள அவரது மாமனாா் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தாா். அப்போது, குமரேசனுக்கும், அவரது மனைவி அருணாதேவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.