கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அலுவலா்கள் உறுதிமொழியேற்பு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அலுவலா்கள் உறுதிமொழியேற்பு

News image
Updated On :19 மார்ச் 2024, 11:14 pm

மதுரை: நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வருகிற ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா.சௌ. சங்கீதா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தொடங்கிவைத்தாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மோனிகா ரணா, மாநகரக் காவல் ஆணையா் லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், வருவாய்க் கோட்டாட்சியரும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான ஷாலினி உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.