ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மகன் கொலை: தந்தை கைது

மதுரையில் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:40 pm

Din

மதுரையில் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூா் பாலம் ஸ்டேசன் சாலை நந்தவனம் பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (61). இவரது மனைவி வளா்மதி (55). இவா்களது மகன் லட்சுமணன் (28). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில், லட்சுமணன் தினசரி இரவில் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை நள்ளிரவும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணன், தந்தை வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றாா்.

இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன், மகன் லட்சுமணனை கீழே தள்ளி மாவரைக்கும் இயந்திர (கிரைண்டா்) கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தாா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வாசுதேவன் மீது கொலை வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.