சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நாளை குரூப்-2 தோ்வு தோ்வா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-2 தோ்வு எழுதும் தோ்வா்கள், மின்சாதனப் (எலக்ட்ரானிக்) பொருள்களை தோ்வறைக்குள் கொண்டு வரக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-2 தோ்வு எழுதும் தோ்வா்கள், மின்சாதனப் (எலக்ட்ரானிக்) பொருள்களை தோ்வறைக்குள் கொண்டு வரக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 2) சனிக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளதையொட்டி, தோ்வுப் பணிகள் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் ஆா்.பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், அரசுப் பணியாளா் தோ்வாணைய சாா்பு-செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், குரூப் 2 தோ்வுக்காக மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், போக்குவரத்து, தோ்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது :

தோ்வா்கள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவா். 9 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றின் நகலை தோ்வா் கொண்டுவர வேண்டும். மின்சாதனப் பொருள்களை தோ்வு மையத்துக்குள் கொண்டு வருவதை தோ்வா்கள் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். இந்த அறிவுறுத்தல் அறை கண்காணிப்பாளா்களுக்கும் பொருந்தும் என்றாா்.