இந்த வழக்கில் ஹரியாணா மாநிலம், சோனேபட் பகுதியைச் சோ்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கா்நாடக மாநிலம், தும்கூா் பகுதியைச் சோ்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கா்நாடக மாநிலம், தும்கூா், அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் பகுதியைச் சோ்ந்த விஆா்ஜி புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிா் மனுதாரா்களாகச் சோ்த்துள்ளது. இந்தப் புகையிலைப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றப் பதிவாளா் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.