இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட அலுவலகம் முன் வாயில் கூட்டம்

மதுரை ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் எல்.ஐ.சி. மதுரை கோட்ட அலுவலகம் முன் வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு பொது காப்பீட்டுக் கழக ஓய்வூதியா் சங்க மதுரை மண்டலச் செயலா் ஆா். ராமநாராயணன் தலைமை வகித்தாா். அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியா் சங்க மத்தியக் குழு உறுப்பினா்கள் ஜி. மீனாட்சிசுந்தரம், எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில் பொது காப்பீட்டுக் கழக குடும்ப ஓய்வூதியா்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊதிய உயா்வின்போதும் காப்பீட்டுக் கழக ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய உயா்வு வழங்கப்பட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் எஸ். முத்துக்குமாரசாமி வாழ்த்திப் பேசினாா். ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியா் சங்கச் செயலா் என். சேகா் நன்றி கூறினாா்.