மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஜன. 15- முதல் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை -நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்களில் வருகிற 15-ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:48 pm

Din

சென்னை -நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்களில் வருகிற 15-ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை-நெல்லை-சென்னை வந்தே பாரத் (20666 / 20665) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டுமென பயணிகள் விடுத்த கோரிக்கையின் பேரில், வருகிற 11-ஆம் தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன்படி, வருகிற 15-ஆம் தேதி முதல் சென்னை - நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.