தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:24 pm

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்த இந்த நிகழ்வில் ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்’, ‘நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம்’ என விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம், ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வுப் பேரணியில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.