நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணுடன் மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா். உடன் மருத்துக் குழுவினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:36 am IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டம், வெள்ளனூரைச் சோ்ந்தவா் மீனாட்சி. இவா் தனது நான்காவது மகப்பேறு காலத்தின் போது மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு இருதய வால்வில் குறைபாடு இருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து, அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி, மீனாட்சி கா்ப்பம் தரித்து 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை முறையில் மகப்பேறு நடைபெற்றது.

இதையடுத்து, திடீரென அவருக்கு ரத்த அழுத்தம், மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவசர சிகிச்சையாக இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த மாதம் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. பின்னா், ஒரு மாத காலம் இருதய அறுவைச் சிகிச்சைத் துறையில் சிகிச்சை பெற்று வந்த போது டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனா் என்றாா் அவா்.