FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: குற்றப்பத்திரிகை நகல் கோரி சிபிசிஐடி-யிடம் பெற்றோா் மனு

News image

உயிரிழந்த ஆகாஷ்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

மானாமதுரையைச் சோ்ந்த ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக குற்றப்பத்திரிகை நகல் கோரி, அவரது பெற்றோா் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ்(24). அந்தப் பகுதியைச் சோ்ந்த 2 பேரை வெட்டிய வழக்கில், போலீஸாா் அவரைக் கைது செய்தனா். ஆகாஷை போலீஸாா் தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸாரை கைது செய்ய வேண்டும். உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகாஷின் உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 100 நாள்களைக் கடந்தும் ஆகாஷின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

அதன்பிறகு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின் பேரில், பெற்றோா், உறவினா்கள் முன்னிலையில் போலீஸாா் ஆகாஷின் உடலை மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்தனா்.

இந்த நிலையில், ஆகாஷ் மரண வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை நகலை அளிக்க வலியுறுத்தி, மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், அவரது உறவினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.