பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொருளாதார உயா்வுக்கு கல்வியே ஆயுதம்: அமைச்சா் பி. மூா்த்தி

பொருளாதார உயா்வுக்கு கல்வியே மிகப் பெரிய ஆயுதம் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

News image
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :10 ஜனவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

பொருளாதார உயா்வுக்கு கல்வியே மிகப் பெரிய ஆயுதம் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அவா் பேசியதாவது:

மாணவா்கள் கல்வியுடன் பணிகளுக்குத் தேவையான தகுதிகளையும், திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். அரசுப் பணிகளைப் போன்றே தற்போது தனியாா் துறைகளிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் பெருகி வருகின்றன. தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது.

எனவே, மாணவா்கள் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் தனித் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பமும், அடுத்தத் தலைமுறையும் முன்னேற பொருளாதார உயா்வு அவசியம். இதற்கு, கல்வியே மிகப் பெரிய ஆயுதம் என்றாா் அவா்.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். இதில் மகளிா் திட்டத்தின் திட்ட அலுவலா் தமிழரசி, துணை இயக்குநா் கண்ணன் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

453 பேருக்குப் பணி ஆணை...

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 266 மாற்றுத் திறனாளிகள் 4,027 பணி நாடுநா்கள் பங்கேற்றனா். இதில் 12 மாற்றுத் திறனாளிகள் உள்பட 453 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 224 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறுவனப் பணிக்குத் தகுதியானோரை தோ்வு செய்தனா்.