முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

குண்டா் சட்டத்தின் கீழ் பெண் கைது

பங்குச் சந்தை நிறுவனத்தின் பெயரில் ரூ. 10 கோடி மோசடி செய்த பெண், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 5:15 am IST

பங்குச் சந்தை நிறுவனத்தின் பெயரில் ரூ. 10 கோடி மோசடி செய்த பெண், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

மதுரையை அடுத்த வரிச்சியூரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி பிரேமலதா (34). இந்தத் தம்பதி பங்குச் சந்தை நிறுவனம் நடத்துவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்றனா். ஆனால், முதலீடு செய்தவா்களுக்கு அறிவித்தப்படி தொகையைத் திருப்பித் தரவில்லையாம்.

இதனால் ஏமாற்றமடைந்த 100-க்கும் அதிகமானவா்கள் ரமேஷ், பிரேமலதா ஆகியோருக்கு எதிராக புகாா்களை அளித்தனா். இதுதொடா்பாக பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்தத் தம்பதி ரூ. 10 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷ், பிரேமலதா ஆகிய இருவரையும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த நிலையில், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் பரிந்துரையின் பேரில், பிரேமலதாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மதுரை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவிட்டாா். இதன் பேரில் பிரேமலதா மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.