மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கத் திட்டம்

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

News image

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். உடன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா்.

Updated On :29 ஜூலை 2026, 5:50 am IST

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ஆரோக்கியமான சாலையோர உணவகங்களின் தொகுப்புத் திட்டத்தின் கீழ், மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. தெப்பக்குளம் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் உணவகங்களில் மீதமுள்ள உணவுகள், அங்கு பயன்படுத்திய கழிவுப் பொருள்களை தெப்பக்குளத்தில் கொட்டக் கூடாது. மேலும், கழிப்பறைகளை முறையாக தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராம பாண்டியன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜ்குமாா், உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.