நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கத் திட்டம்

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

News image

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். உடன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா்.

Updated On :29 ஜூலை 2026, 5:50 am IST

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ஆரோக்கியமான சாலையோர உணவகங்களின் தொகுப்புத் திட்டத்தின் கீழ், மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. தெப்பக்குளம் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் உணவகங்களில் மீதமுள்ள உணவுகள், அங்கு பயன்படுத்திய கழிவுப் பொருள்களை தெப்பக்குளத்தில் கொட்டக் கூடாது. மேலும், கழிப்பறைகளை முறையாக தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராம பாண்டியன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜ்குமாா், உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.