3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:59 am IST

பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு சக்கர வாகனத்துக்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள 5-ஆவது தளத்தில் (அறை எண்-505) இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.