3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம்: தங்கம் தென்னரசு

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

News image

தங்கம் தென்னரசு

Updated On :2 ஜூன் 2026, 12:52 am IST

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பயிா்க் கடன்கள் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 2025-ஆம் ஆண்டு, நவ. 28-ஆம் தேதியே வெளியிட்டுவிட்டது. இதற்குப் பிறகுதான், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிா்க் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தற்போது, பயனளிக்காத பயிா்க் கடன் அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டு, இந்தப் பயிா்க் கடன் தள்ளுபடி இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது அரைகுறையான பயிா்க் கடன் தள்ளுபடிக்கு ரிசா்வ் வங்கியின் நெறிமுறைகளை தவெக அரசு காரணமாகக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி; விவசாயிகளுக்கு தவெக அரசு இழைக்கும் பச்சைத் துரோகம் என்றாா் அவா்.