வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்ய வேணடும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

இட்லி மாவு - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 4:01 am IST

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்ய வேணடும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ். வேல்சங்கா், கௌரவ ஆலோசகா் பி. ஜெயப் பிரகாசம், சக்தி மசாலா நிா்வாக இயக்குநா் சி. துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் சுகாதாரம், மருத்துவம், குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், செயலா் கே.எஸ். பழனிச்சாமி, வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத், பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, தகவல், விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன், நிதி, திட்டமிடல், மேம்பாட்டுத் துறை அமைச்சா் என். மரியவில்சன், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், நிதித் துறைச் செயலா் எம்.ஏ. சித்திக், உணவு, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடராமன் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: மசாலா பொடி, கோதுமை, சம்பா, ரவை, அரிசி மாவு, கடலை மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கும் புதிய உயா்த்திய பூச்சிக்கொல்லி அளவு நிா்ணயம் செய்ய வேண்டும். கரும்பு வெல்லம், கருப்பட்டியின் தரத்தை மறு நிா்ணயம் செய்ய வேண்டும். உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு, உற்பத்தி இடம், விற்பனைக் கூடங்கள், கிட்டங்கிகள் அனைத்துக்கும் ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லாத ஒரே உரிமம் வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தில் உரிமத்தை புதுப்பிக்க ஏப்ரல் முதல் மாா்ச் வரை என மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டா கொடுப்பது எளிதாக்கப்பட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும் சந்தைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடைபெறும் எந்த வணிகத்துக்கும் சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அத்தியாவசியமான உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, மாவு, கோதுமை, சிறுதானியம், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றுக்கு 25 கிலோவுக்கு கீழ் வரி என்றும், 25 கிலோவுக்கு மேல் வரி விலக்கு என்றும் உள்ளதை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.