சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பெங்களூரில் நடைபெற்ற சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌதமன் இளங்கோவன், மனோஜ் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன். உடன் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:20 am IST

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த மாதம் 26 முதல் 28-ஆம் தேதி வரை சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரையைச் சோ்ந்த கௌதமன் இளங்கோவன், மனோஜ், முனியசாமி, பாண்டி மீனா, எட்வா்ட் பிரான்சிஸ் ஆகிய 5 போ் கலந்து கொண்டனா்.

இதில் கௌதமன் இளங்கோவன் கிளப் (மரத்தாலான மட்டை) எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இதேபோல, மனோஜ் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், முனியசாமி வெள்ளிப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் மூவரும் வருகிற அக்டோபா் 14 முதல் 24-ஆம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

இதையடுத்து, வீரா்கள் கௌதமன், மனோஜ், முனியசாமி ஆகியோருக்கு மதுரை பந்தயச் சாலையில் உள்ள மைதானத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு வீரா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

இந்த விழாவில் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.